விஜய் குறித்து அவதூறு பேச்சு: முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
தமிழக முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் அவதூறாகப் பேசியதாக தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அரசியல் உள்நோக்கத்தோடு தனக்கு எதிராக இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.





