ஒரு சேலை 50 ரூபாய் என சலுகை அறிவிக்கப்பட்டதால் கூட்ட நெரிசல்..!
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் துணிக்கடை திறப்பு விழா சலுகையாக முதல் வரும் 3 ஆயிரம் நபர்களுக்கு 50 ரூபாய் புடவை விற்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
பெண்கள் யாரும் முக கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அந்தக் கூட்ட நெரிசலில் இருந்துள்ளனர். அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கிருந்த மக்களை கட்டாயப்படுத்தியுள்ளனர்.







