கொரோனா நோயாளிகள் மன அழுத்தத்தை போக்க இசை நிகழ்ச்சி..!
தஞ்சாவூர் அருகே கொரொனா நோயாளிகளின் மன அழுத்தத்தை போக்குவதற்காக இசைக் கச்சேரி நடத்தப்பட்டது. பட்டுக் கோட்டை பெருமாள் கோவில் பகுதியில் உள்ள கொரொனா சிகிச்சை மையத்தில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களது மன அழுத்தத்தை போக்குவதற்காக மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற்று அதிராம்பட்டிணம் கிளை நிர்வாகிகள் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பாடகர்கள் பாடிய பாடல்களை கேட்டுக்கொண்ட நோயாளிகள் உற்சாகம் அடைந்தனர்.






