தமிழகத்தில் இன்று மேலும் 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… உயிரிழப்பு 88
தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து, 480 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 820 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 4 ஆயிரத்து 186 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் இன்று 88 பேர் உயிரிழந்த நிலையில் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.






