கொரொனா அச்சத்தால் பிறந்த குழந்தைக்கு முக்கவசம்!
தாயின் வயிற்றிலிருந்து உலகை எட்டிப்பார்க்கும் பச்சிளம் குழந்தைகளுக்கும் கொரொனா அபாயத்தால் தாய்லாந்தில் முக கவசம் அணிவிக்கும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. பிரசவ அறையில் முக கவசம் அடைந்த நர்சுகளின் கைகளில் முக கவசம் அணிந்த நிலையில் இருக்கும் குழந்தைகளின் காட்சிகளை பாங்காக்கில் உள்ள மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
வெல்டர்கள் அணியும் முக ஷீல்டு போல பிளாஸ்டிக்கில் இந்த கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இருமல் மற்றும் தும்மலால் மருத்துவ பணியாளர்களிடம் இருந்து கொரொனா பரவாமல் இருக்க பிறந்தவுடன் குழந்தைகளுக்கு முக கவசம் அணிவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.






