பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் – முதல்வர் வி.டி.சதீசன்
கேரளாவில் அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாகப் பயணிக்கும் புதிய திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் எர்ணாகுளத்தில் கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்துள்ளார்.
சாதாரண அரசுப் பேருந்துகளில் மட்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தின் மூலம், பெண்கள் தங்களின் பொருளாதாரத் தேவைகளுக்காகப் பயணிப்பது எளிதாக்கப்பட்டுள்ளதோடு, சமூகத்தில் விளிம்புநிலை மக்களாக இருக்கும் திருநங்கைகளும் இதில் பயன்பெறலாம் என அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.





