பழனியில் படிக்கெட்டுகள் காணாமல் போனதாக புகார்..!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடைகள் முன்பு இருந்த இரும்பு கிரில் களும் பழனியில் திருடு போன சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே பீடர் ரோடு மற்றும் திண்டுக்கல் ரோடு பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு வைக்கப்பட்டிருந்த 4 ஆயிரம் முதல் 6 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரும்பு கிரில்கள் படிகளை மர்ம நபர்கள் இரவோடு இரவாக திருடி நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள பழனி நகர காவல்நிலைய போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு திருடர்களைத் தேடி வருகின்றனர்.







