சிறுமி கர்ப்பமானதால் கல்லூரி மாணவனும், பள்ளி மாணவியும் தனிக்குடித்தனம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனை சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த அன்புதாசன் என்ற இளைஞன் மூன்றாம் ஆண்டு கல்லூரி பயின்று வருகிறான். அதே பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியிடம் நட்பாக பழகிய அன்புதாசன் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார்.
இதனால் மாணவி கர்ப்பம் அடைந்ததால் அவரை திருமணம் செய்து தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். மாணவியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.







