இந்தியாவின் டிக் டாக் கிளையை மூடிய சீனா..! வேலை இழந்த ஊழியர்கள்..!
சீனாவின் டிக்டாக் நிறுவனம் இந்தியாவில் தனது கிளையை மூடுவதாக அறிவித்துள்ளதால் அதில் பணியாற்றிய 2000 பேர் வேலை இழந்துள்ளனர். பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி உள்ளிட்ட ஏராளமான செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இந்த நிலையில் நிறுவனம் தனது இந்திய ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்தியாவில் மீண்டும் டிக் டாக் பயன்பாட்டிற்கு வரும் என தாங்கள் நம்புவதாகவும் ஆனால் அதற்கான கால அளவீடு தெரியாததால் இந்திய கிளையை விடுவதாகவும் அறிவித்துள்ளது. டிக்டாக்கின் இந்த முடிவால் இந்திய பிரிவில் பணியாற்றிய 2000 பேர் வேலை இழந்துள்ளனர்.






