ஐபிஎல் வெற்றியை கொண்டாட சென்னை காத்திருக்கிறது..!
ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.
இதற்கு ட்விட்டரில் வாழ்த்துக்களை தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள முக ஸ்டாலின் வெற்றியை கொண்டாடுவதற்காக அன்புடன் சென்னை காத்திருக்கிறது எனவும் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.




