அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகாக்கள் மாற்றம்..!
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்டுள்ளார். அவருக்கு இதயத்தில் 3 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக பரிசோதனையில் தெரியவந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதையடுத்து அவர் வசம் இருந்த இரண்டு இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜி, மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகளின் அமைச்சராக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் வசம் மின்சாரத் துறை தற்போது நிதி அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசுக்கு கூடுதலா வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் கையில் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, வீட்டு வசதி வாரிய அமைச்சரான ஈரோடு முத்துச்சாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செந்தில் பாலாஜியின் துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான பரிந்துரை ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறை, அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் வழங்கப்பட்டது. அண்ணாமலை, பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோவை வெளியிட்ட திமுக மட்டுமின்றி ஒட்டு மொத்த அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் உள்ள தங்கம் தென்னரசுவிடம் முக்கிய துறையான நிதித்துறை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது செந்தில் பாலாஜியின் மின்சாரத்துறையும் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமே வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் அவரிடம் இருந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஈரோடு முத்துச்சாமிக்கு வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.





