அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று செல்லும் சிசிடிவி காட்சிகள்..!
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மலவராயன் நேந்தல் கிராமத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சந்தைக்கடை பகுதிக்கு வரும்போது திடீரென பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடியது.
உடனடியாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பியுள்ளனர். சாலையோரத்தில் இருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.






