பிரீஃபையர் கேம் விளையாட விடாததால் சிறுவன் தற்கொலை..!
சென்னை பீர்க்கங்கரணையில் செல்போனில் விளையாட அனுமதிக்காததால் 15 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலிசார் தெரிவித்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாதவன் கடந்த புதன்கிழமை பீர்க்கங்கரணையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு மாதவன் தனது செல்போனில் எந்நேரமும் ஃப்ரீ பையர் என்கிற வீடியோ கேமை விளையாடி வந்ததால் அவரது உறவினர்கள் செல்போனை வாங்கி வைத்துக் கொண்டு வெளியே செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த மாதவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.







