--- --:--:-- --

அன்னூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பா.ஜ.க சார்பில் அரசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது !!!

1

கோவை மாவட்டம் அன்னூர் பேரூராட்சியில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மூலம் தினசரி 15 வார்டுகளிலும் கிருமி நாசினி தெளிப்புமற்றும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது .

 

தற்பொழுது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையிலும் உயிரை துச்சமாக நினைத்து பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு அன்னூர் பா.ஜ.க சார்பில் 250 கிலோ அரசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் வடக்கு மாவட்ட தலைவர் வி.பி.ஜெகநாதன் , வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் பா.ஜ.க நிர்வாகி ராஜ ராஜசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Right Menu Icon