கணவருடன் வீட்டில் நடந்த சண்டை.. வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மனைவி..!
கணவன் மீது கோபத்திலிருந்த மனைவி அவரது வாகனத்தை தீயிட்டு கொளுத்தி ஆத்திரத்தை தீர்த்துக் கொண்ட சம்பவம் நாற்றம்பள்ளியில் நடந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கம்பிய பட்டு பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார் – சசிகலா தம்பதி இவர்களுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் சசிகலா அம்மா வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
தனது மனைவியை அழைத்து வர முத்துக்குமார் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மீண்டும் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த சசிகலா தனது தாயார் உடன் சேர்ந்து முத்துக்குமாரின் வாகனத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார் இந்த சமூகம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது





