நூலிழையில் உயிர் தப்பிய முதியவர்..!
ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற முதியவர் சாலையில் விழுந்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சேலம் மேச்சேரியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்து தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது ஓடும் பேருந்திலிருந்து இறங்க முயன்ற முதியவர் ஒருவர் சாலையில் தவறி விழுந்தார்.
காயங்கள் எதுவும் இல்லாமல் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.





