ஊரடங்கின் போது மது அருந்திவிட்டு ஆண் நண்பருடன் நடிகை செய்த வேலை!
கன்னட நடிகை ஷர்மிலா மந்த்ரே கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஊரடங்கு அமலில் இருக்கும்போது நண்பர்களுடன் பாரில் மது அருந்திவிட்டு காரை ஓட்டியதால் அதிகாலை 3 மணிக்கு பெங்களூருவின் வசந்த் நகர் பாலத்தின் கீழ் உள்ள தூணில் கார் மோதி விபத்துக்குள்ளானது, காரில் இருந்த நடிகையும் அவரது ஆண் நண்பரும் காயமடைந்தனர்.
அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீசார் தாமாகவே ஷர்மிளா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் திடீரென ஒருவர் தாம் கார் டிரைவர் என்றும் காரை ஷர்மிலா ஓட்டவில்லை என்றும் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.






