மன உளைச்சலால் நிகழ்ந்த விபரீதம்..!
திருப்பத்தூர் அடுத்த குமாரம்பட்டி பகுதியில் வீட்டை தாழிட்டுக் கொண்டு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குழந்தையின்மையால் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக கூறப்படும் அந்த நபர் விபரீத முடிவை மேற்கொண்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





