கடலில் வலையில் சிக்கிய அரிய வகை உயிரினம்..!
வலையில் சிக்கிய ஒரு வகை டால்பினை மீண்டும் கடலுக்குள் விட்ட மீனவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் காலிநத்தம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்த பொழுது கடலில் அரிய வகை டால்பின் சிக்கி உள்ளது.
உடனே மீனவர்கள் அந்த டால்பினை மீண்டும் கடலுக்குள் விட்டனர். இவர்களின் செயலுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.





