நான்கு வயது சிறுவனின் கைவிரல்கள் எஸ்கலேட்டரில் நசுங்கியதால் பரபரப்பு..!
சென்னை விமான நிலையத்தில் நான்கு வயது சிறுவனின் கைவிரல்கள் எஸ்கலேட்டரில் நசுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐசக் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் உள்ள உறவினர் வீட்டில் தீபாவளியை கொண்டாடுவிட்டு அந்தமான் செல்வதற்கு மீனம்பாக்கம் வந்தனர்.
அவர்கள் சென்று கொண்டிருந்த பொழுது ஐசக்கின் நான்கு வயது பேரனின் கைவிரல்கள் எதிர்பாராதவிதமாக எஸ்கலேட்டரில் சிக்கி நசுங்கியது.





