பீர் குடிக்க ஆசைப்பட்டு சிக்கிக் கொண்ட நாகப்பாம்பு
ஒடிசா மாநிலத்தில் பியர் பாட்டிலுக்குள் ஒரு நாக பாம்பு சிக்கியது. மிகவும் விஷத்தன்மை மிக்க நாகப்பாம்பு அது கருதப்படுகிறது காட்டுப்பகுதியில் பியர் குடிக்க ஆசைப்பட்ட நாகபாம்பு அந்த பாட்டிலுக்குள் சிக்கிக் கொண்டது. வனப்பகுதிக்குள் குடித்து கும்மாளமிட்டு சென்ற சிலர் வீசியெறிந்த ஒரு பாட்டிலுக்குள் இந்த பாம்பு பியரை ருசி பார்க்க சென்று மாட்டிக் கொண்டது. இதனை கண்ட உள்ளூர் வாசி ஒருவர் வனத்துறைக்கு தகவல் அளித்தார். வனத்துறையினர் விரைந்து வந்து பாம்பை மீட்டனர்.





