சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து..!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதிய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.
மணிகண்டன் என்பவர் தனது அண்ணன் மகளான ஷாலினியுடன் வேடசந்தூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காக்கா தோப்பு பகுதியில் குறுக்கே கார் வருவதை பார்த்தவர் சாலையில் கடக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






