இலங்கையில் இன்றிரவு முதல் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு..!
இலங்கை முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தனது ட்விட்டர் பதிவு மூலம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சி அதிகரித்த நிலையில் மேலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






