நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட பெரிய துளை..!
உயரம், நடுவானில் இறக்கை குலுங்கினாள் பயம் போன்ற காரணத்தினால் விமானப்பயணம் பலருக்கும் சவாலான ஒன்றாக உள்ளது. மனதில் ஏற்படும் சிறு கோளாறு கூட ஒட்டுமொத்த பயணிகளின் உயிரை பறித்துவிடும். இந்த நிலையில் நடுவானில் ஏற்பட்ட பெரிய துளையுடன் விமானம் 14 மணி நேரம் வானில் பறந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த சனிக்கிழமை துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பயணிகளுக்கு தரையிறங்கும் போது அதிர்ச்சி காத்திருந்தது. விமானத்தின் ஒரு பகுதியில் பெரிய துளை இருந்துள்ளது. அந்த துணையுடன் விமானம் 14 மணிநேரம் பயணம் செய்துள்ளது.
விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் பலத்த இடி போன்ற சத்தத்தை கேட்டதாக அதில் பயணித்த பயணிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து எமிரேட் விமான நிறுவனம் கூறுகையில் விமானத்தின் டயர்களில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக ஒரு பகுதி விமானத்தின் துளையை ஏற்படுத்தி உள்ளது என்றும் மற்றும் விமானத்தினுள் அமைப்பிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.





