20 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் கடந்த 6 வயது சிறுவன்..!
தூத்துக்குடியில் 6 வயது சிறுவன் இரண்டு மணி நேரத்தில் 20 கிலோ மீட்டர் தூரம் ஓடி சாதனை படைத்தார் . இரு கால்களும் செயலிழந்த மாற்றுத்திறனாளி மருது பெருமாளின் மகனுக்கு சிறுவயது முதலே ஓட்டப்பந்தயத்தில் மீது அதீத ஆர்வம் இருந்ததால் கடுமையாக பயிற்சி ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து கடற்கரை சாலையில் உள்ள பனிமயமாதா ஆலயம் வரை 20 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடந்து சாதனை படைத்தார். சிறுவனின் சாதனை குறித்து கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.







