காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை வெளியிட்ட காதலன்..!
காதலியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். குமரிமாவட்டம் திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அஜித் என்ற 20 வயது இளைஞர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை கல்லூரியில் முதல் காதலித்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென அந்த பெண் விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் காதலி பிரிவதற்கு முன் நெருக்கமாக இருந்த படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் குமரி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ள நிலையில் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





