மெரினாவில் குடியரசு தின அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட முதல்வர்..!
சென்னை மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குடியரசு தின அலங்கார ஊர்திகளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த மாணவ மாணவிகள் பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதனால் அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.





