அதிமுக சட்ட வல்லுநர் குழுவினர் ஆளுநரிடம் புகார் மனு..!
அதிமுகவின் சட்ட வல்லுநர் குழுவின் உறுப்பினர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவியை நேரில் சந்தித்து திமுக அரசு மீது புகார் மனு அளிக்கின்றனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற அதிமுகவின் சட்ட வல்லுநர் குழுவினர் ஆளுநரை சந்தித்தனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை நிலவுவதாக ஆளுநரிடம் அவர்கள் புகார் அளித்தனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் உடன் சுந்தரபாண்டி பாபு, முருகவேல், இன்பதுரை ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இருந்தனர்.
பின்னர் ஜெயக்குமார், சிவி சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் விழுவதாக அவர்கள் கூறினர்.





