ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு..!
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நடிகர் சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சிம்புவின் மாநாடு படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு அடுத்த இன்னிங்சை தொடங்கி விட்டார் என அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் திடீரென காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார் சிம்பு.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய குணமடைந்து வருகிறேன் எனவும், பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார்.





