வேலூரில் பொதுஇடங்களுக்கு வருவோர் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்..!
வேலூரில் பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியிருக்கிறார்.
ரேஷன் கடைகள், டீ கடைகள், வங்கிகள், பள்ளி, கல்லூரிகள், ஹோட்டல்களுக்கு வருவோர் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
இவைதவிர திரையரங்குகள், தங்கும் விடுதிகள், கடைவீதிகள், பெட்ரோல் நிலையங்கள் என பொது இடங்களுக்கு செல்வோர் கட்டாயமாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியிருக்கிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





