கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு இலவசமாக பார்பிக்யூ உணவு..!
ருமேனியாவில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு இலவசமாக பார்பிக்யூ உணவு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமானோர் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
நகரில் உள்ள உணவகம் ஒன்றில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு அந்த நாட்டின் பாரம்பரிய உணவான பார்பிக்யூ எனப்படும் இறைச்சி இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனால் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்த ஆர்வத்துடன் கொரொனா தடுப்பூசி செலுத்தி வந்துள்ளனர்






