அதிமுக தொண்டர்கள் உடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது..!
அதிமுக தொண்டர்கள் மனவருத்தத்தில் இருப்பதாகவும் அவர்களை விரைவில் சந்திக்கப் போவதாகவும் சசிகலா பேசும்போது ஆடியோ வெளியாகியுள்ளது. ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் குரல் பதிவுகள் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில் அரக்கோணத்தை அடுத்த செம்பேடு கிராமத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உடன் சசிகலா பேசும் ஐந்தாவது ஆடியோ வெளியாகியுள்ளது.






