உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பு..!
சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை பகுதியில் திறந்தவெளி ஆட்டோவில் சென்று அவர் ஆதரவு கோரினார். வீதி எங்கும் அவருக்கு வாக்காளர்கள் வரவேற்பளித்தனர்.
அப்போது அவருடன் பலர் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். தங்கள் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகிக்க இல்லை என புகார் அளித்த பெண்களிடம் வெற்றி பெற்றவுடன் குறைகளைத் தீர்த்து வைப்பதாக உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார்.







