தலைகீழாக நடந்து கொண்டே காரை இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நபர்..!
100% வாக்களிப்பை வலியுறுத்தி கோவையில் இளைஞர் ஒருவர் தலைகீழாக நடந்து கொண்டே காரை இழுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் 100% வாக்களிப்பை வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் அரசு புரத்தில் இளைஞர் ஒருவர் தலைகீழாக நடந்தபடி இழுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது பேசிய அவர் யோகா மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்புவதாக தெரிவித்தார்.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆதரித்து பேசிநடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.






