கடந்த 50 வருடங்களில் போகாத ஏழ்மை இப்போது இலவசத்தால் ஒழிந்து விடுமா..!
கடந்த 50 வருடங்களில் போகாத ஏழ்மை இப்போது அரசியல் கட்சிகள் கொடுப்பதாக அறிவித்துள்ள இலவசத்தால் ஒழிந்து விடுமா என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பினார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவர் அங்குள்ள ராமநாதபுரம், திருவள்ளுவர் நகரில் பிரச்சாரம் செய்தார்.
234 தொகுதிகளிலும் சுற்றி வருவதால் கோவை தெற்கு தொகுதிக்கு தினமும் வர முடியவில்லை என்றாலும் தான் தொகுதி பிரச்சினையை கவனித்து வருவதாக கமல்ஹாசன் கூறினார்.






