வருமானமின்றி தவித்த முதிய தம்பதி தற்கொலை..!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வருமானமின்றி தவித்த முதிய தம்பதி தற்கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநகர் காலனியை சேர்ந்த முதிய தம்பதி கிருஷ்ணராஜ் ரத்தினத்திற்கு 3 பெண் குழந்தைகள் இருந்த நிலையில் மூன்று பேரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தனர்.
இதனையடுத்து இருவரும் தனி குடோனில் வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தனர். திடீரென டோன் மூடப்பட்டதால் வருமானம் இன்றி தவித்து வந்த தம்பதி உடனிருந்து கவனித்துக் கொள்ள யாரும் இல்லாத விரக்தியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






