தயக்கம் இன்றி கொரொனா தடுப்பூசி போட்டுக்கொள்வோம்..!
கொரொனா நோயிலிருந்து காத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய தடுப்பூசி தினத்தையொட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் மனித சமுதாயத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரொனாவின் கோரப்பிடியிலிருந்து தம்மை சார்ந்தவர்களையும் காத்துக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
எனவே எந்தவித தயக்கமுமின்றி அறிவியலின் கொடையான தடுப்பூசி போட்டுக் கொள்வோம் என்றும் முக கவசம் அணிவோம் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






