சீனாவை கடுமையாக புழுதிப் புயல் தாக்கியுள்ளது..!
கடந்த பத்து வருடங்களில் இல்லாத அளவிற்கு சீனாவை கடுமையாக புழுதிப் புயல் தாக்கியுள்ளது. இது மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சீன தலைநகர் பீஜிங்கில் திடீரென பழுப்பு நிறமாக காட்சியளிக்க தொடங்கியுள்ளது.
வானமா மண்ணா என்று தெரியாத அளவிற்கு அங்கு புழுதி புயல் கிளம்பியது. வடமேற்கு சீனாவில் இருந்து கோபி பாலைவனத்தில் இருந்து பலத்த மணல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக சாலைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.






