--- --:--:-- --

7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..!

4

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக காவலர் மீது போக்குவரத்து திடீர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மதுரை ஐ‌ஜி அலுவலகத்தில் அலுவலக பணியாளராக பணிபுரியும் பாலாஜி தனது தெருவில் வசிக்கும் அந்த சிறுமிக்கு தொடர்ந்து ஒரு வார காலமாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் காலை வழக்கம்போல் சிறுமியை தனது வீட்டுக்கு பாலாஜி அழைத்து சென்றபோது அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டுக்குள் நுழைந்து மகளை மீட்ட சிறுமியின் தாய் பாலாஜியை உள்ளே வைத்து பூட்டி விட்டு புகார் கொடுத்துள்ளார்.

 

சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று போலீசார் பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon