எம்ஜிஆர் பெயரை சொல்லி தான் யாரும் கட்சி தொடங்கும் நிலை உள்ளது..!
எம்ஜிஆர் பெயரை சொல்லி தான் யாரும் இன்று கட்சி தொடங்கும் நிலை இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார். 104வது பிறந்த நாளையொட்டி சென்னை அசோக் நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தெரிந்த ஒரே அரசியல் தலைவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மட்டும்தான் என்றும், எனவே கட்சி தொடங்குபவர்கள், புரட்சித்தலைவருடைய பெயரை உச்சரித்தால் தான் கட்சியை துவங்க முடியும் என்றநிலை உள்ளது.







