அழிந்து போனதாக கூறப்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிப்பு..!
தென்னமெரிக்க நாடான போலேவியாவின் வனபகுதியில் 20க்கும் மேற்பட்ட உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆண்டஸ் மலையன், சாவே கிராண்டே என்ற இடத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மிகச்சிறிய லில்லிபுட்டே தவளை மற்றும் அழிந்து போனதாகக் கருதப்பட்ட பிசாசு கண் தவளை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
இதில் லில்லிபுட்டியன் தவளை 10 மில்லிமீட்டர் அளவு காணப்படுகிறது. உலகில் உள்ள மிகச்சிறிய தவளை களில் இதுவும் ஒன்று. நான்கு புதிய பட்டாம்பூச்சி இனங்கள் மற்றும் 120 ஆண்டுகளாக பார்க்கப்படாத பூக்கும் மரம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.






