--- --:--:-- --

திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவது செல்லுபடியாகாது – உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

16

திருமணத்திற்காக மட்டுமே மதம் மாறுவது செல்லுபடியாகாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்ற நீதிபதி திரிபாதி முன் விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மணப்பெண் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி மதம் மாறி இருப்பதாகவும் ஒரு மாத இடைவெளியில் கடந்த ஜூலை 31 ஆம் தேதி திருமணம் நடை பெற்றிருப்பது தெரிய வந்ததாகவும் நீதிபதி குறிப்பிட்டார். திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதி உத்தரவிட்டார்.

 

இதற்கிடையே லவ் ஜிகாத் திருமணங்களை தடுக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்று ஏற்றப்படும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon