தீவிரவாதிக்கு தண்ணீர் கொடுத்த இந்திய ராணுவத்தினர்..!
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டரின் போது ஒரு தீவிரவாதியை சரணடைய ராணுவத்தினர் அனுமதியளித்து அவனுக்கு தண்ணீர் கொடுத்த வீடியோ காட்சி இந்திய வீரர்களின் மனிதநேயத்தை வெளிப்படுத்தி வைரலாக பரவி வருகிறது.
அந்த தீவிரவாதியின் தந்தை இராணுவ வீரர்களின் கால்களில் விழுந்து தமது மகனுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்ததற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். ஜஹாங்கீர் பட் என்ற 31 வயதான அந்த தீவிரவாதி கடும் துப்பாக்கி சண்டைக்கிடையே இராணுவத்தினரின் உறுதிமொழியை ஏற்று சரணடைந்தான்.






