6 மாதங்களாக 2 சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகளை கடந்த ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது முதியவர் உட்பட ஆறு பேரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
தாயார் வேலைக்கு சென்ற பின்னர் வீட்டில் இரண்டு சிறுமிகளும் தனியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களாக அவர்களை பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததை அடுத்து அவர்களை பிடிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கொரொனா பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளை நாமக்கல் குழந்தைகள் நல காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.





