படப்பிடிப்பின் போது காயமடைந்த நடிகர் டொவினோ தாமஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி..!
மலையாள நடிகர் டோவினோ தோமஸ் படப்பிடிப்பின் போது காயமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த டோவினோ தாமஸ் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.
தற்போது காளை என்ற படத்தில் நடித்து வரும் ஹீரோவுக்கு அந்த படத்தின் ஆக்ஷன் காட்சிகளை படம் பிடிக்கும்போது காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நுரையீரல் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பதால் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.






