ஆற்றில் அடித்து வரப்பட்ட 12 அடி நீள மலைப்பாம்பு..!
கன்னியாகுமரியில் ஆற்றில் அடித்து வரப்பட்ட சுமார் 12 அடி நீள மலைப் பாம்பை இளைஞர்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தக்கலை அருகே சித்திரங்கோடு ஆட்சியில் பொதுமக்கள் குளித்துக் கொண்டிருந்தபோது மலைப்பாம்பை கண்ட மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
புதர்மண்டிய ஒரு வலையில் பதுங்கிய மலைப்பாம்பை பொதுமக்கள் லாவகமாக பிடித்தனர். வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு மலைப்பாம்பு வெள்ளிமலை மலைப்பகுதிக்குள் விடப்பட்டது.






