--- --:--:-- --

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துகள் தொடங்கியதும் கட்டணம் உயர்வா ?

தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துகள் தொடங்கியதும் கட்டணம் உயர்வா ?

தமிழகத்தில் பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்குக்குப்பின் பஸ் போக்குவரத்து துவக்கப்படும் என தெரிய வருகிறது.

 

ஊரடங்கு காரணமாக வருவாய் இழப்பு ஏற்பட்டு, தமிழக அரசு நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு, மது வகைகள் விலை உயர்வு, அரசு ஊழியர் ஓய்வு வயது உயர்வு என, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்த வகையில், நிலைமையை சமாளிக்க, ஊரடங்கு முடிந்து பஸ் போக்குவரத்து துவங்கும் போது, பஸ் கட்டணத்தை சற்று உயர்த்தவும், அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon