ஆவின் பால் பண்ணையில் உள்ள தொழிலாளர்கள் 2 பேருக்கு கொரோனா!
pouring milk in a glass isolated against white background
சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் தொழிலாளர்கள் இருவருக்கு கொரொனா தொற்று உள்ளது என சோதனையில் உறுதியாகியுள்ளது. சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்சத்து 38 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பப் பட்டு வருகின்றது.
இங்கிருந்து சென்னை மாநகரம், அண்டை மாவட்டங்கள் வெளி மாவட்டங்களுக்கும் பால் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கொரொனா தொற்று உள்ளது என சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.







