நெடுஞ்சாலையில் இறங்கிய ஹெலிகாப்டர்….பரபரப்பு..!
காசியாபாத் ஹின்டன் விமானப்படைத் தளத்திலிருந்து சண்டிகருக்கு சென்றுகொண்டிருந்த சீட்டா ரக ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறால் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இன்று காலை 8 மணி அளவில் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டரில் இரண்டு போர் விமானிகள் பயணம் செய்தனர்.
பாதி வெளியில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து கட்டுப்பாட்டு அறையின் உத்தரவின்பேரில் உத்திரப்பிரதேச மாநிலம் பாக்தாத் அருகே பாபி கிராமத்தில் கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் அது தரையிறக்கப்பட்டது. அதன் பிறகு அரை மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்றது. ஊரடங்கை காரணம் காட்டி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களின் வேலை நிறுத்த கூடாது என கர்நாடக அரசு எச்சரித்துள்ளது.
பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் 20 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கால் வீட்டிலிருந்து செய்யும் பணிகள் இல்லை என்று கூறி பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வேலை வழங்கவில்லை என கூறப்படுகிறது. பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு பணி நிமித்தம் செய்யவும் ஊதியத்தை குறைக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.







