--- --:--:-- --

மார்ச் மாதத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடக்கம்…!

4

நீட் தேர்வுக்கான அரசு பயிற்சிகள் வரும் மார்ச் மாதம் மீண்டும் துவங்கும் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். மாணவர்கள் பொதுத் தேர்வுக்காக பயிற்சி பெற வேண்டும் என்பதாலும், செய்முறை தேர்வுகள் தொடங்க இருப்பதாலும் கடந்த 5 ஆம் தேதியுடன் நீட் தேர்வுக்கான பயிற்சி முடிக்கப்பட்டன.

 

பொதுத் தேர்வு முடிந்த பிறகு மீண்டும் மார்ச் மாதத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் உண்டு உறைவிட மையங்களில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon